ALAM SEKITAR & CUACA

விவசாயிகளுக்கு உதவும் முயற்சிகளை தீவிரப்படுத்துதல், தொடர்ச்சியான உணவு விநியோகத்தை உறுதி செய்யும் .

14 மார்ச் 2022, 11:31 AM
விவசாயிகளுக்கு உதவும் முயற்சிகளை தீவிரப்படுத்துதல், தொடர்ச்சியான உணவு விநியோகத்தை உறுதி செய்யும் .

ஷா ஆலம், மார்ச் 14: கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து விவசாயிகள் அனுபவிக்கும் வலி மற்றும் கஷ்டங்களைக் குறைக்க பல்வேறு திட்டங்களைத் தீவிரப்படுத்துமாறு மாநில அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் சுல்தான், உணவு விநியோகம் பாதுகாப்பான மட்டத்தில் இருப்பதை உறுதிசெய்யவும், பொருளாதார வளங்களை மேம்படுத்தப்படவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“2020 முதல் உலகம் முழுவதையும் தாக்கிய கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, நாட்டின்,, குறிப்பாக சிலாங்கூரில் மிகவும் வேதனையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"அதில் விவசாயத் துறையும் தப்பவில்லை, இதன் விளைவாக விவசாயத் திட்டங்கள் மற்றும் உணவு பொருள் விநியோகமும் பாதிப்படைந்தது" என்று சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

14வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் ஐந்தாவது தவணை கூட்டத்தின் தொடக்க விழாவுடன் இணைந்த அவர் இன்று இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் சுல்தான் மாநில அரசு 2021 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு உணவுப் பயிர்த் துறையின் வளர்ச்சிக்காக RM6.7 கோடியை ஒதுக்கியுள்ளது என்றார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு, உணவுப் பாதுகாப்புத் திட்டம் - சிலாங்கூர் அக்ரோ பார்க் ஸ்மார்ட் அக்ரோப்ரெனூர் வளர்ச்சி (SSAP) பொருளாதார வாய்ப்புகளை இளைஞர்களிடையே ஊக்குவிக்க செயல்படுத்தப்பட்டது.

"சபா பெர்ணாம், சிப்பாங், கோலா லங்காட், கோலா சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்கள் இளைஞர்களை உணவு விவசாய திட்டங்கள் மற்றும் பொருளாதார செயல்களை அதிகரிக்க ஊக்குவிப்பதாக, அவர் கூறினார்.

 

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.