ECONOMY

மலையில் இருந்து விழுந்த கற்பாறைகளால் 8 வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்தன

10 மார்ச் 2022, 2:58 AM
மலையில் இருந்து விழுந்த கற்பாறைகளால் 8 வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்தன

கோலாலம்பூர், மார்ச் 10: பண்டான் இண்டாவில் உள்ள தாமான் புக்கிட் பெர்மாய் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை நடந்த சம்பவத்தில், அருகிலுள்ள மலையிலிருந்து விழுந்த பாறையில் மோதியதில் 8 வாகனங்கள் மோசமாகச் சேதமடைந்தன.

அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஃபரூக் எஷாக் கூறுகையில், அதிகாலை 4.30 மணியளவில், அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் 4 இன் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது ஒரு பாறைக் கட்டி விழுந்தது.

“எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பலத்த மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் போலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது” என அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முகமது ஃபாரூக்கின் கூற்றுப்படி, புகார்தாரரால் செய்யப்பட்ட போலிஸ் புகார்  வேறொரு இலாக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது  மற்றும் எந்த விசாரணை ஆவணமும் திறக்கப்படவில்லை.

பலத்த காற்று மற்றும் கனமழையால் மரங்கள் சரிந்து விழும் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்கள் வானிலை குறித்துக் கவனமாக இருக்கவும், மலைகள் அல்லது மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.