ECONOMY

செர்டாங்கில் பெண் படுகொலை - சந்தேக நபர் சரணடைந்தார்

21 பிப்ரவரி 2022, 3:48 AM
செர்டாங்கில் பெண் படுகொலை - சந்தேக நபர் சரணடைந்தார்

கோலாலம்பூர், பிப். 21: செர்டாங் பெர்டானா, ஸ்ரீ கெம்பாங்கனில் நேற்று இரவு நடந்த சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் போலிசாரால் தேடப்பட்டு வந்த ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர், இன்று காலை செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) சரணடைந்தார்.

செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ. அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலனாக இருந்த 33 வயது நபர் காலை 11.30 மணியளவில் சரணடைந்ததாகவும், கொலைக்கான காரணம் பொறாமையாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

லாரி ஓட்டுநராகப் பணியாற்றிய சந்தேக நபரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் எடுக்கவில்லை என்றும், குற்றவியல் சட்டம் 302-ன் கீழ் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அன்பழகன் கூறினார். நேற்று, 29 வயதுடைய பெண் ஒருவர் தனது வணிக வளாகத்தில் ஏற்பட்ட சண்டையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.