ECONOMY

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைகளுக்கு அனுமதி

17 ஜனவரி 2022, 2:21 PM
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைகளுக்கு அனுமதி

ஷா ஆலம், ஜன 17- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தொடங்கி அனுமதி வழங்கப்படும்.

தற்போதைய நிலவரப்படி மாநிலத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைகளுக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

வரும் 31 ஆம் தேதியுடன் இத்தடை முடிவுக்கு வரவுள்ள நிலையில் பிப்ரவரி முதல் தேதி தொடங்கி மலையேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.

மாநிலத்தில் வானிலை சீரடைந்து வரும் நிலையில் மலையேறும் நடவடிக்கைகளுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்று விளையாட்டு மற்றும் வீரதீர நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்களும் பங்கேற்பாளர்களும் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மலையேறும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மாநில வளத்துறை கடந்தாண்டு நவம்பர் மாதம் கூறியிருந்தது. 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.