ஷா ஆலம் டிச 28 - மாநில அளவிலான 2022 புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக சமய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாகவும் தஹ்லீல் விழா, துஹா ஓதும் நிகழ்வு மற்றும் ஜிகிர் முனாஜாத் ஆகியவற்றை அரசு ஏற்பாடு செய்யும் என்று அவர் சொன்னார்.
இந்நிகழ்ச்சிகளை ஜாய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.
தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளன என்றார் அவர்.
நேற்று, சிலாங்கூர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வெள்ள நிலைமை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அமிருதீன் கூறினார்.
கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் சிலாங்கூர் மாநிலத்தில் 40,000 க்கும் மேற்பட்டோரை பாதித்ததாக அமிருடின் கூறினார்.
ECONOMY
2022 புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து- மாநில அரசு முடிவு
28 டிசம்பர் 2021, 4:50 AM


