ECONOMY

நஜிப் குற்றவாளியே!  மேல் முறையீட்டு நீதிமன்றம் தீரப்பு

8 டிசம்பர் 2021, 6:20 AM
நஜிப் குற்றவாளியே!  மேல் முறையீட்டு நீதிமன்றம் தீரப்பு

ஷா ஆலம், டிச 8- எஸ்.ஆர்.சி.இண்டர்னேஷல்  நிறுவன நிதி மோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் குற்றாவளியே என மேல் முறையீட்டு நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. அந்த முன்னாள் பிரதமருக்கு உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு காலச் சிறை மற்றும் 21 கோடி வெள்ளி அபராதத் தொகையையும் அது நிலை நிறுத்தியது.

டத்தோ அப்துல் கரீம் அப்துல் ஜாலில் தலைமையில் கூடிய மூவர் கொண்ட அமர்வு  இந்த தீர்ப்பை வழங்கியது. டத்தோ ஹாஸ் ஜனா மேஹாட் மற்றும் டத்தோ வஸீர் அலம் மைடின் ஆகியோர் இதர இரு நீதிபதிகளாவர்.

நஜிப்பிற்கு எதிரான நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்பதையும் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு உறுதிப்படுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.