ECONOMY

82.8 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

25 நவம்பர் 2021, 9:01 AM
82.8 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 25- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 82.8 விழுக்காட்டினர் அல்லது 26 லட்சத்து 7 ஆயிரத்து 392 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 87.7 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 62 ஆயிரத்து 739 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.59 மணி வரை இந்த எண்ணிக்கை பதிவானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

பெரியவர்களில் 95.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 24 லட்சத்து 42 ஆயிரத்து 346 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 98 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 44 ஆயிரத்து 240 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

நேற்று நாடு முழுவதும் 138,752 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 5,067 பேர் முதல் தடுப்பூசியையும் 8,428 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் 125,257 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டதின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 23 லட்சத்து 91 ஆயிரத்து 444 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.