ஷா ஆலம், நவ 21- யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் 2021 ஆண்டு நவம்பர் மாத கல்வித் தவணைக்கு 522 புதிய மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.பவுண்டேஷன் எனப்படும் அடிப்படை கல்வி, டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்பு ஆகிய துறைகளில் சேர்வதற்கு அம்மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் சந்தை மற்றும் மாணவர் சேர்ப்பு துறையின் இயக்குநர் இணைப் பேராசிரியர் டாக்டர் ஹஷிமா இஸ்மாயில் கூறினார்.
நவம்பர் மாத கல்வித் தவணைக்கான விண்ணப்ப தேதி வரும் டிசம்பர் 17ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணவர் எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே, இம்மாதம் 17 ஆம் தொடங்கிய மாணவர் அறிமுக வாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக யுனிசெல் வர்த்தக தொடர்புப் பிரிவுத் தலைவர் ஹஸ்ரி அபு ஹசான் குறிப்பிட்டார்.
யுனிசெல் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர விரும்புவோர் மேல் விபரங்களுக்கு apply.unisel.edu.my. Layari www.unisel.edu.my என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 03-55223400 /014-8172198 என்ற எண்களில் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
ECONOMY
யுனிசெல் பல்கலைக்கழகத்தில் சேர 522 மாணவர்கள் பதிவு
22 நவம்பர் 2021, 6:10 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

sukankini
மலேசிய இந்திய மாணவர்கள் சதுரங்க போட்டியில் உலகளவில் சாதனை புரிய இதுபோன்ற போட்டிகள் அவசியம் .
n.pakiya
26 ஜூலை 2025

pendidikan
மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் 1326 மாணவர்கள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி
n.pakiya
26 ஜூலை 2025

national
ரிங்கிட் வலுவடைந்தது நாட்டின் பொருளாதார மீதான நம்பிக்கையின் அறிகுறி
Shalini Rajamogun
13 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




