ECONOMY

உலு சிலாங்கூரில் சனிக்கிழமை வேலை வாய்ப்புச் சந்தை நடைபெறும்

2 நவம்பர் 2021, 4:34 AM
உலு சிலாங்கூரில் சனிக்கிழமை வேலை வாய்ப்புச் சந்தை நடைபெறும்

ஷா ஆலம், நவ 2- சிலாங்கூர் அரசின் வேலை வாய்ப்புச் சந்தை சுற்றுப் பயணம் இம்மாதம் 6 மற்றும் 20 ஆம் தேதிகளில் உலு சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் நடைபெறும்.

இந்த நிகழ்வு உலு சிலாங்கூர்  டேவான் மெர்டேக்காவில் வரும் 6 ஆம் தேதியும் பெட்டாலிங், டேவான் மெந்தாரி பாயா ஜெராசில் 20 ஆம் தேதியும் நடைபெறும்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொள்ள விரும்புவோர்  www.selangorbekerja.com.my.  எனும் அகப்பக்கம் வாயிலாக தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடந்த ஷா ஆலம் மற்றம் கோல சிலாங்கூரில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு பயணத் தொடரில் 239 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

அவ்விரு இடங்களிலும் நடைபெற்ற வேலை வாய்ப்புச் சந்தைகளில் 1,108 பேர் பங்கு கொண்ட வேளையில் அவர்களில் 513 பேர் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது 4.4 விழுக்காடாக இருக்கும் வேலையில்லாதோர் எண்ணிக்கையை அடுத்தாண்டில் 3.7 விழுக்காடாக குறைக்கும் நோக்கில் மாநில அரசு இந்த வேலை வாய்ப்புச் சந்தையை மாநிலம் முழுவதும் நடத்தி  வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.