ஷா ஆலம், நவ 1- நாட்டில் கடந்த இரு தினங்களாக கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. இன்று அந்நோய்த் தொற்றுக்கு 4,626 பேர் ஆளாகியுள்னர்.
நேற்று இந்த எண்ணிக்கை 4,979 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து இதுவரை இந்நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 76 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் சொன்னார்.








