HEALTH

நாட்டில் நேற்று வரை 94.9 விழுக்காட்டு மலேசியர்கள் தடுப்பூசி பெற்றனர்

28 அக்டோபர் 2021, 6:00 AM
நாட்டில் நேற்று வரை 94.9 விழுக்காட்டு மலேசியர்கள் தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், அக் 28- நாட்டிலுள்ள பெரியவர்களில் 94.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 22 லட்சத்து 14 ஆயிரத்து 490 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று இரவு 11.59 மணி வரை இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும் 97.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 280 ஆயிரத்து 885 பேர் குறைந்தது ஒரு டோஸ் மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

நாட்டில் நேற்று 147,242 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 123,182 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகவும் 18,493 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடியே 95 லட்சத்து 81 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 62 விழுக்காட்டினர் அல்லது 19 லட்சத்து 51 ஆயிரத்து 450 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர். மேலும் 82.4  விழுக்காட்டினர் அல்லது 25 லட்சத்து 92 ஆயிரத்து 48 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

இது தவிர, ஊக்கத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 152,036  ஆக உயர்ந்துள்ளது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.