ECONOMY

“நாடி“ திட்டத்தின் வாயிலாக 1,194 பெண் தொழில் முனைவோருக்கு உதவி

19 அக்டோபர் 2021, 11:11 AM
“நாடி“ திட்டத்தின் வாயிலாக 1,194 பெண் தொழில் முனைவோருக்கு உதவி

ஷா ஆலம், அக் 19- “நாடி“ எனப்படும்  ஸ்கிம் நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் கீழ் இதுவரை 1,194 பெண் தொழில் முனைவோர் பயன் பெற்றுள்ளனர்.

இந்த கடனுதவித் திட்டம் சுமார் 50 லட்சம் வெள்ளியை உள்ளடக்கியிருந்ததாக சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியம் முகநூல்  வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

சிறு அளவில் வியாபாரத்தை தொடக்குவோருக்கு விரைவாகவும் சுமையில்லாத வகையிலும் மூலதன சூழல் நிதியை வழங்குவதை இந்த “நாடி“ திட்டம் இலக்காக கொண்டுள்ளது.

இத்திட்டடத்தின் வாயிலாக இதுவரை 1,194 மகளிர் சிறு வணிகர்களுக்கு 51 லட்சத்து 84 ஆயிரம் வெள்ளி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளதாக அந்த வாரியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மக்களுக்கு உதவுவதற்காக  நாடி திட்டத்தின் கீழ்  ஒரு கோடி வெள்ளி ஹிஜ்ரா ஒதுக்கியிருந்தாகவும் அந்த அறிக்கை கூறியது.

இந்த உதவித் திட்டத்தில் பங்கேற்க மகளிருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் ஆர்வமுள்ளளோர் http://167.172.13.68/ எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்றும் அது தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.