HEALTH

90.9 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

14 அக்டோபர் 2021, 6:49 AM
90.9 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், அக் 14- நாட்டில் நேற்று வரை 90.9 விழுக்காட்டுப் பெரியவர்கள் அல்லது 2 கோடியே 12 லட்சத்து 90 ஆயிரத்து 960 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 94.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரத்து 828 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று 207, 520 பெரியவர்கள் மற்றும் இளையோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 4 கோடியே 62 லட்சத்து 52 ஆயிரத்து 254 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இது தவிர, 12 முதல் 17 வயதான பதின்ம வயதினரில் 14.4 விழுக்காட்டினர் அல்லது 453,906 பேர்  இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 75.9 விழுக்காட்டினர் அல்லது 23 லட்சத்து 90 ஆயிரத்து 062 இளையோருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.