HEALTH

இளையோருக்கான சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம் விரைவில் அமல்

10 அக்டோபர் 2021, 8:57 AM
இளையோருக்கான சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம் விரைவில் அமல்

ஷா ஆலம், அக் 10- ஒன்றரை லட்சம் டோஸ் தடுப்பூசிகளை உள்ளடக்கிய சிலாங்கூர் அரசின் இளையோருக்கான செல்வேக்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மந்திரி புசார் டதோஸ்ரீ அமிருடின் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டத்திற்கான செயலாக்க வழிமுறைகள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருவதோடு விரைவில் அதன் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர்  மாநிலத்திலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களை இத்திட்டம் இலக்காக  கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சிலாங்கூர் சமய இலாகாவினால் நடத்தப்படும் சமயப் பள்ளிகள், சீன மற்றும் தமிழ் பள்ளிகளும் இத்திட்டம் உள்ளடக்கியிருக்கும் என்று அவர்  குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில மக்கள் தடுப்பூசி பெறுவதை விரைவுபடுத்தும் நோக்கில் மாநில அரசு கடந்த ஜூன் மாதம் செல்வேக்ஸ்  தடுப்பூசித் திட்டத்தை தொடக்கியது.

மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு  மாநில அரசு 20 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.