HEALTH

மலேசியர்களில் 86.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

2 அக்டோபர் 2021, 9:19 AM
மலேசியர்களில் 86.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், அக் 2- நாட்டில் நேற்று வரை 86.8 விழுக்காட்டு பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் வாயிலாக பகிர்ந்து கொண்ட பதிவில் இத்தகவல் வெளியிடப்பட்டள்ளது.  

நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணி வரை 2 கோடியே 1 லட்சத்து 17 ஆயிரத்து 843 பேர் அல்லது 86.8 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதாக அத்தகவல் கூறியது.

மேலும்  2 கோடியே 20 லட்சத்து 59 ஆயிரத்து 329 பேர் அல்லது 94.2 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதனிடைய 12 முதல் 17 வயது வரையிலான 237,245 இளையோருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நேற்று நாடு முழுவதும் 237,245 பேர் தடுப்பூசியைப் பெற்றனர். அவர்களில் 103,021 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 134,224 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 4 கோடியே 39 லட்சத்து 33 ஆயிரத்து 988 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.