HEALTH

கோவிட்-19 தினசரி எண்ணிக்கை 13,104 ஆக பதிவு- சிலாங்கூரில் 1,558 நேர்வுகள்

26 செப்டெம்பர் 2021, 9:28 AM
கோவிட்-19 தினசரி எண்ணிக்கை 13,104 ஆக பதிவு- சிலாங்கூரில் 1,558 நேர்வுகள்

ஷா ஆலம், செப் 26- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இறங்கு முகமாக உள்ள நிலையில் இன்று 13,104 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 13,899 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நேற்று 2,341 ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 1,558 ஆக குறைந்துள்ளதை சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்ட தரவுகள் காட்டுகின்றன.

அதிக நோய்த் தொற்றை பதிவு செய்த மாநிலமாக சரவா விளங்குகிறது. இங்கு நேற்று 2,712 ஆக இருந்த நோயாளிகள் எண்ணிக்கை இன்று 2,943 ஆக உயர்வு கண்டுள்ளது.

நான்கு இலக்க கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலங்களாக ஜொகூர் (1,455), கிளந்தான் (1,206), சபா (1078) ஆகிய மாநிலங்கள் விளங்குகின்றன.

நாட்டின் இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-

பேராக் (994), பினாங்கு (955), கெடா (721), திரங்கானு(685), பகாங் (604), மலாக்கா (362), கோலாலம்பூர் (270), நெகிரி செம்பிலான் (165), பெர்லிஸ் (80), புத்ரா ஜெயா (24), லபுவான் (4)

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.