ஷா ஆலம், செப் 17- மலேசிய மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 60 சமையல் பொருள் பொட்டலங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மூன்று இனங்களுக்கும் சமமாக பகிர்ந்தளித்தது சுங்கை காண்டீஸ் தொகுதி.மலேசிய தினத்தை முன்னிட்டு சுங்கை காண்டீஸ் தொகுதி ஏற்பாடு செய்த கம்போங் ஜோஹான் செத்தியா, தாமான் தெலுக் மெனேகுன், தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் பகுதிகளுக்கான பயண நிகழ்வின் போது மலாய்,சீன மற்றும் இந்தியர்களுக்கு இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி முக்னி கூறினார்.
மலேசிய தினத்தை முன்னிட்டு மூன்று இனங்களின் ஒற்றுமையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த உதவிப் பொருள்களை வழங்கினோம் என்றார் அவர்.
இந்த உதவி பொது மக்களின் சுமையை குறைக்க ஓரளவு உதவும் என்பதோடு ஒற்றுமையும் சுபிட்சமும் நிறைந்த சமுதாயத்தின் உருவாக்கத்திற்கு துணை புரியும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
ECONOMY
மூவின மக்களுக்கும் உணவுப் பொருள்களை பகிர்ந்தளித்தது சுங்கை காண்டீஸ் தொகுதி
17 செப்டெம்பர் 2021, 2:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

national
மலேசியாவின் பணவீக்கம் 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்படும்; பொருளாதார அமைச்சு நம்பிக்கை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



