ECONOMY

பூச்சோங் இண்டா தடுப்பூசி மையத்தில் (பிபிவி) மொத்தம் 25,190 நபர்கள் தடுப்பூசிகளைப் பெற்றனர்

17 ஆகஸ்ட் 2021, 4:28 AM
பூச்சோங் இண்டா   தடுப்பூசி மையத்தில் (பிபிவி) மொத்தம் 25,190 நபர்கள் தடுப்பூசிகளைப் பெற்றனர்

ஷா ஆலம், 16 ஆகஸ்ட்: பூச்சோங் இண்டாவின் சுபாங் ஜெயா நகர கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) பல்நோக்கு மண்டபத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் (பிபிவி) மொத்தம் 25,190 நபர்கள் தடுப்பூசிகளைப் பெற்றனர்.

சிலாங்கூர் , கின்ராரா மாநில சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான இங் ஸீ ஹான் கூறுகையில் , இந்த பிபிவி ஜூலை 26 அன்று செயல்படத் தொடங்கியதிலிருந்து அனைத்து பெறுநர்களும் தங்கள் முதல் டோஸைப் பெற்றதாகக் கூறினார்.

"இன்று முதல், இந்த PPV இரண்டாவது டோஸ் ஊசி மூலம் மட்டுமே தொடரும்," என்று அவர் பேஸ்புக் வழியாக கூறினார். ஜூன் 25 அன்று,  சிலாங்கூர்  சுகாதார எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மஹ்மூட் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழுவிற்கு (சிஐடிஎஃப்) பூச்சோங்கில் சிறிய அளவிலான பிபிவியை நிறுவுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த PPVயின்  திறப்பு மக்களுக்கு, குறிப்பாக உள்ளூர் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஜூலை 22 அன்று,  தான் வெளியிட்ட  அறிக்கை குறித்தும்  பின்னர்,  எம்பிஎஸ்ஜே (MBSJ) பூச்சோங் இண்டா பல்நோக்கு மண்டபத்தில் ஜூலை 26 முதல் ஒரு சிறிய அளவிலான பிபிவி செயல்பட  தொடங்கியது என்று அவர் தெரிவித்தார்.

இந்த PPV ஒரே நாளில் 1,000 முதல் 1,500 பேருக்கு இடமளிக்கும் திறன் கொண்டது மற்றும் இது (PICK) தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.