HEALTH

கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 19,740 ஆக குறைந்தது

16 ஆகஸ்ட் 2021, 10:02 AM
கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 19,740 ஆக குறைந்தது

ஷா ஆலம், ஆக 16- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 19,740 ஆக குறைந்தது. நேற்று இந்த எண்ணிக்கை 20,546 ஆக இருந்தது.

சிலாங்கூரிலும் நேற்று 7,307 ஆக இருந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 5,706 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஆறு மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து ஆயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சபா (1,728), கெடா (1,592), ஜொகூர் (1,510), கோலாலம்பூர், (1,360), பினாங்கு (1,251), கிளந்தான் (1,227) ஆகியவையே அம்மாநிலங்களாகும்.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- பேராக் (938), திரங்கானு (688), பகாங் (646), நெகிரி செம்பிலான் (343), புத்ரா ஜெயா (43), பெர்லிஸ் (20), லபுவான் (2).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.