HEALTH

நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளது- ஐ.ஜி.பி.

30 ஜூலை 2021, 7:33 AM
நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளது- ஐ.ஜி.பி.

கோலாலம்பூர், ஜூலை 30- நாட்டின்  பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு  முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக போலீஸ் துறை பொது மக்களுக்கு உறுதியளித்துள்ளது.

நாட்டில் நிலைமை பாதுகாப்பாக இருப்பதை போலீசார் தொடர்ந்து உறுதி செய்து வருவர் என்பதால்  பொது மக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போலீசார் கண்காணிப்பு பணிகளைத்  தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக தங்களின் அன்றாட நடவடிக்கைகளின் போது தேசிய  பாதுகாப்பு மன்றம் நிரணயித்துள்ள எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படி பொது மக்களை அவர் அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.