HEALTH

கடனுதவிப் பெற கடுமையான நிபந்தனைகள் வேண்டாம்- லிட்டில் இந்தியா வர்த்தக சங்கம் கோரிக்கை

13 ஜூலை 2021, 1:00 PM
கடனுதவிப் பெற கடுமையான நிபந்தனைகள் வேண்டாம்- லிட்டில் இந்தியா வர்த்தக சங்கம் கோரிக்கை

ஷா ஆலம், ஜூலை 13- வியாபாரம் சித்தம் எனும் திட்டத்தின் வாயிலாக கடனுதவி பெறுவதற்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டாம் என்று கிள்ளான், லிட்டில் இந்தியா வர்த்தகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இத்தகைய கடனுதவிகள் வணிகர்களின் சுமையைக் குறைப்பதற்கு துணை புரிந்தாலும் அக்கடனை பெறுவதற்கான நிபந்தனைகளும் ஆவண பரிசீலனைகளும் கடுமையானதாக இருப்பது விண்ணப்பதாரர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று சங்கத்தின் தலைவர் சார்ல்ஸ் மாணிக்கம் கூறினார்.

சிலாங்கூர் அரசின் இந்த கடனுதவித் திட்டத்தை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். வியாபார நடவடிக்கைகளை மூடுவதிலிருந்து காப்பாற்ற இந்த திட்டம் பெரிதும் துணை புரிகிறது. 

தற்போதைய சூழலில் 150 வர்த்தகங்களில் ஒன்பது மட்டுமே செயல்படுவதற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் இணையம் வாயிலாக வியாபாரம் செய்தாலும் அவர்களுக்கு குறைவான வரவேற்புதான் கிடைக்கிறது என்று அவர் சொன்னார்.

“வியாபாரம்@சித்தம்” திட்டத்தின் வாயிலாக இந்திய சமூகத்திற்கு உதவ சிறப்பு மூலதன சுழல் நிதியாக  ஒரு கோடி வெள்ளியை மாநில அரசு ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் வழி ஒதுக்கீடு செய்துள்ளதாக தொழில் முனைவோர்  மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் நேற்று கூறியிருந்தார்.

“சித்தம்” எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் வர்த்தக பயிற்சி, கடனுதவி மற்றும் பொருளுதவி திட்டங்கள் வழி பயன் பெறுவதற்கு சுமார் இரண்டாயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக அவர் சொன்னார்.

சித்தம் திட்டங்களின் வாயிலாக பயன்பெற விரும்புவோர்  ஹிஜ்ரா சிலாங்கூர் அகப்பக்கத்தின் வழி அல்லது 016-9512458 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.