HEALTH

இன்று நாட்டில் 6,982 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 2,907 பேர் பாதிப்பு

2 ஜூலை 2021, 8:34 AM
இன்று நாட்டில் 6,982 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 2,907 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஜூலை 2- நாட்டில் இன்று 6,982 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நாட்டில் நோய்த் தொற்று தொடர்ந்து அபாய நிலையில் உள்ளதை இது காட்டுகிறது.

நேற்று நோய்த் தொற்றின் எண்ணிக்கை 6,988 ஆக இருந்ததை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சு இதன் வழி நாட்டில் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 765,949 ஆக உயர்ந்துள்ளதாக கூறியது.

சிலாங்கூரில் 2,907 சம்பவங்களும் கோலாலம்பூரில் 637 சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் 606 சம்பவங்களும் ஜொகூரில் 517 சம்பவங்களும் சரவாவில் 440 சம்பவங்களும் பதிவாகின.

 பினாங்கு (351), பகாங் (329), கெடா (257), சபா (230), மலாக்கா(202), பேராக் (182), லபுவான் (131), கிளந்தான் (129), திரங்கானு (44), புத்ரா ஜெயா 20) ஆகிய மாநிலங்கள்அடுத்த நிலையில் உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.