ECONOMY

சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு  மாவட்டங்களில் பி.கே.பி.டி. அமல்

29 ஜூன் 2021, 6:18 AM
சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு  மாவட்டங்களில் பி.கே.பி.டி. அமல்

ஷா ஆலம், ஜூன் 29- சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படவுள்ளது.

கடுமையாக்கப்பட்ட  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் மாவட்டங்கள் வருமாறு-

  1. சி.எல்.கியு. கமுடா கார்டன்ஸ், குண்டாங் ஜெயா, கோம்பாக். 

- இங்கு கடந்த 14ஆம் தேதி முதல் 57 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

  1. தாமான் மூர்னி, சிப்பாங்

- இங்கு கடந்த ஒரு வார காலத்தில் 36 நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  1. பங்சாபுரி ஸ்ரீ ஆயு, செக்சன் 4, பண்டார் பாரு பாங்கி

- இப்பகுதியில் கடந்த ஒரு மாத காலத்தில் 205 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  1. சி.எல்.கியு. ஜொஹான் செத்தியா, கம்போங் ஜொஹான் செத்தியா, கிள்ளான்

-இங்கு கடந்த 12 நாட்களில் 156 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.