HEALTH

எஸ்.ஒ.பி. விதியை மீறினார்- அமைச்சர் முஸ்தாபாவுக்கு எதிராக போலீஸ் விசாரணை

28 ஜூன் 2021, 2:43 AM
எஸ்.ஒ.பி. விதியை மீறினார்- அமைச்சர் முஸ்தாபாவுக்கு எதிராக போலீஸ் விசாரணை

ஷா ஆலம், ஜூன் 28- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறியதற்காக பிரதமர் துறை (பொருளாதாரம்) அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமது மன்னிப்பு கோரியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை தாம் போலீசாரிடம் விட்டு விடுவதாக அவர் சொன்னார்.

கிளந்தான், ஜெலியில் உள்ள உணவகம் ஒன்றில்  சிலருடன் அவர்  உணவருந்தும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளத் தகவலை ஜெலி மாவட்ட  போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. அகமது அரிபின் அமைச்சரை நேரில் தொடர்பு தெரிவித்ததாக அமைச்சரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் தாம் கம்போங் காலாயில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்ததை அமைச்சர் முஸ்தாபா முகமது ஒப்புக் கொண்டதாகவும் அவ்வறிக்கை தெரிவித்த து.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.