HEALTH

கோவிட்-19 எண்ணிக்கை இன்று 6,440 ஆகி உயர்ந்தது- சிலாங்கூரில் 2,095 சம்பவங்கள் பதிவு

18 ஜூன் 2021, 1:04 PM
கோவிட்-19 எண்ணிக்கை இன்று 6,440 ஆகி உயர்ந்தது- சிலாங்கூரில் 2,095 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜூன் 18- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை  மீண்டும் ஆறாயிரத்தை தாண்டியது. இன்று 6,440 நோய்த் தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவான வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 5,738 ஆக இருந்தது.

இன்று  பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து நாட்டில் இதுவரை 685,204 பேர் கோவிட்-10 நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.

மாநில வாரியாக நோய்த் தொற்று சம்வங்களின் எண்ணிக்கை வருமாறு-

சிலாங்கூர் (2,095), கோலாலம்பூர் (816), சபா (199), ஜொகூர் (592), சரவா (536), நெகிரி செம்பிலான் (870), கிளந்தான் (200), பினாங்கு (122), பேராக் (357), கெடா (259), மலாக்கா (223), பகாங் (79), திரங்கானு (32), லவுவான் (152), புத்ரா ஜெயா (6), பெர்லிஸ் (2).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.