ECONOMY

ஆற்று வடிநிலப் பகுதிகளில் லுவாஸ் 24 மணி நேர சோதனை

15 ஜூன் 2021, 4:07 AM
ஆற்று வடிநிலப் பகுதிகளில் லுவாஸ் 24 மணி நேர சோதனை

ஷா ஆலம், 15- நாட்டில்  முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இம்மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட போதிலும் ஆற்று வடிநிலப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகிறது.

நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலத்தில் ஆறுகளில் நீர் மாசுபாடு ஏற்பட்டு அதனால் நீர் விநியோகத் தடை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் சிறப்பு  விரைவுப் படை இந்த கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று அறிக்கை ஒன்றில் அந்த வாரியம்

கூறியது.

லுவாஸ் தலைமையகமும் ஷா ஆலம் செக்சன் 23 மற்றும் பாங்கியில் உள்ள அதன் கிளை அலுவலகங்களும் இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அது தெரிவித்தது.

இம்மாதம் 14ஆம்  தேதியுடன் முடிவுக்கு வரவேண்டிய முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் வரும் 28 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.