HEALTH

நாட்டில்  இன்று 5,793 கோவிட்-19 சம்பங்கள் பதிவு-  சிலாங்கூரில் 1,582 பேருக்கு பாதிப்பு

12 ஜூன் 2021, 10:25 AM
நாட்டில்  இன்று 5,793 கோவிட்-19 சம்பங்கள் பதிவு-  சிலாங்கூரில் 1,582 பேருக்கு பாதிப்பு

ஷா ஆலம், ஜூன் 12- நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் நேற்றை விட சுமார் 1,000 குறைந்து 5,793ஆக பதிவானது. நேற்று பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை 6,849 ஆகும்.

சிலாங்கூரில் நேற்று 2,558 ஆக இருந்த கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை இன்று 1,582 ஆக குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நாட்டில் இதுவரை 652,204 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளான வேளையில் சிலாங்கூரில் இந்த எண்ணிக்கை 212,985 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

மாநில வாரியாக நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-

நெகிரி செம்பிலான் (618), சரவா (569), கோலாலம்பூர் (559), ஜொகூர் (504), சபா (378), கிளந்தான் (337), லபுவான் (250), பேராக் (218), பினாங்கு (198), மலாக்கா (178), கெடா (171), பகாங் (121), திரங்கானு (82), புத்ரா ஜெயா (23), பெர்லிஸ் (5).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.