HEALTH

கே.டி. மஹாவங்சா கப்பல் பணியாளர்கள் 98 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று

8 ஜூன் 2021, 2:49 PM
கே.டி. மஹாவங்சா கப்பல் பணியாளர்கள் 98 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று

கோலாலம்பூர், ஜூன் 8- கே.டி. மஹாவங்சா கப்பலின் 98 பணியாளர்களுக்கு  கோவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பதை தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.

கப்பலில் ஏறுவதற்கு முன்னர் அவர்கள் அனைவரிடமும் ஆர்டிகே ஆண்டிஜென் உபகரணம் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

எனினும், கப்பலில் சில தினங்களைக் கழித்தப் பின்னர் அவர்களுக்கு நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைக்கு அவர்கள் அனைவரும் நோய்த் தொற்றுக்கான எந்த அறிகுறியையும் கொண்டிருக்கவில்லை. பாதுகாப்பு கருதி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

பத்து நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மீது மறுபடியும் சோதனை மேற்கொள்ளப்படும். நோயிலிருந்து விடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் கப்பலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.