ECONOMY

பண்டமாரான் தொகுதியில் தடுப்பூசி பதிவு இயக்கம் புதன்கிழமை தொடங்கும்

20 மார்ச் 2021, 4:25 AM
பண்டமாரான் தொகுதியில் தடுப்பூசி பதிவு இயக்கம் புதன்கிழமை தொடங்கும்

ஷா ஆலம், மார்ச் 20- பண்டமாரான் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் கோவிட்-19 தடுப்பூசி பதிவு இயக்கம் வரும் 24ஆம் தேதி புதன் கிழமை தொடங்கி விரிவான அளவில் மேற்கொள்ளப்படும்.

தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டிலான இந்த இயக்கம் தொகுதியின் பல பகுதிகளில் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் தக் சீ கூறினார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பதிந்து கொள்வதற்கு விவேக கைப்பேசி வசதிகளைக் கொண்டிராதவர்களுக்கு உதவும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த பதிவு இயக்கம் வரும் புதன்கிழமை தாமான் சீ லியோங் பாசார் மாலாம் பகுதியிலும் வெள்ளிக்கிழமை சீ லியோங் பாசார் பாகி பகுதியிலும் சனிக்கிழமை தாமான் சீ லியோங் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை பெக்கான் பண்டமாரானிலும் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

இணையம் வாயிலாக பதிவு நடவக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்டவர்களின் அடையாளக் கார்டு எண், முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற விபரங்கள் பெறப்படும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசித்  திட்டத்தில் பங்கேற்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் விரைந்து பதிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் அந்த தடுப்பூசியின் ஆக்கத்தன்மை குறித்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதோடு நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த தடுப்பூசித் திட்டத்திலிருந்து பொதுமக்கள் விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய அடிமட்டத் தலைவர்கள் இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள  வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.