ECONOMY

கோவிட்-19 க்கு பிந்தைய பொருளாதார நிலை- நிபுணர்களுடன் மந்திரி புசார் கலந்துரையாடல்

22 பிப்ரவரி 2021, 1:40 AM
கோவிட்-19 க்கு பிந்தைய பொருளாதார நிலை- நிபுணர்களுடன் மந்திரி புசார் கலந்துரையாடல்

ஷா ஆலம், பிப் 22-  கோவிட்-19 பெருந் தொற்றுக்கு பிந்தைய பொருளாதார திட்டமிடல் தொடர்பிலான விவாத நிகழ்வு ஒன்று நாளை 23 ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு இணையம் வாயிலாக நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் பொருளாதார நிபுணர்களான ஜோமோ க்வாமி சுந்தரம் மற்றும் டாக்டர் நுங்சாரி அகமது ராடி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

"பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதாரம்: எதை நோக்கி நமது இலக்கு" எனும் தலைப்பிலான இந்த விவாதத்திற்கு நாட்டின் பழம்பெரும் பத்திரிகையாளரும் மீடியா சிலாங்கூர் இயக்குநர் வாரிய உறுப்பினருமான ஜோஹான் ஜாபர் நெறியாளராக செயல்படுவார்.

சிலாங்கூர் மாநில அரசின் துணை நிறுவனமான மீடியா சிலாங்கூர் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விவாத நிகழ்வு  Amirudin Shari, Media Selangor   முகநூல் மற்றும்  Selangor TV யூ டியூப் வலையொளி ஆகிய சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.