கோலாலம்பூர், ஜன 27- தைப்பூச இரத ஊர்வலத்தை முன்னிட்டு கோம்பாக் மாவட்டத்தில் உள்ள சில சாலைகள் மூடப்படும் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அரிஃபாய் தராவே கூறினார்.தைப்பூசத் முன்னிட்டு வெள்ளி இரத ஊர்வலம் நடைபெறுவதற்கு தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து இச்சாலைகள் மூடப்படுவதாக அவர் சொன்னார்.
பத்து கேவ்ஸ் சுற்று வட்டத்திலிருந்து ஆலய நுழைவாயில் வரையிலான சாலை, எம்.ஆர்.ஆர்.2 சாலையிலிருந்து ஜாலான் பெருசாஹான் செல்லும் வழி, ஜாலான் பெருசஹான் பத்து கேவ்சிலிருந்து பத்து கேவ்ஸ் சுற்று வட்டம் வரையிலான பகுதி, பத்து கேவ்ஸ் ஆற்றின் குளிக்கும் பகுதி ஆகியவையே போக்குவரத்துக்கு மூடப்படும் பகுதிகளாகும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
இச்சாலைகளில் அமல்படுத்தப்பட்ட போக்குவரத்து தடை வரும் 29 ஆம் தேதி அதிகாலை 6.00 மணி வரை அமலில் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
NATIONAL
தைப்பூசம்; கோம்பாக் வட்டார சாலைகள் மூடப்படும்
27 ஜனவரி 2021, 5:55 AM
தொடர்புடைய செய்திகள்
national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
நிறுவன ஆலோசகராக கணவர் நியமனம்- பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக மனைவி மீது குற்றச்சாட்டு
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் மலேசியா வருகிறார்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




