ஷா ஆலம், நவ 16- சிலாங்கூர் மாநிலத்தில் வசிப்போரில் சுமார் எட்டு லட்சம் பேர்இலக்கவியல் சூழலுக்கு இன்னும் தங்களை தயார் படுத்திக் கொள்ளவில்லை.
முதியோர், சிறு வணிகர்கள், பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும்
இளைஞர்கள் ஆகிய தரப்பினரே இலக்கவியல் துறைக்கு இன்னும் தயாராகவில்லை
என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் இலக்கவியல் பிரிவுத் தலைவர்
கமாருள் நிசாம் காசிம் கூறினார்.
மலேசியர்களில் 12.6 விழுக்காட்டினர் இணையத்தை பயன்படுத்தவில்லை என்பது தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் பார்த்தால் சிலாங்கூரில் சுமார் 831,000 பேர் இணைய ஆற்றலை பெறாமல் உள்ளனர் என்றார் அவர்.
இத்தகைய தரப்பினரை இலக்காக கொண்டு உரிய பயிற்சிகளை வழங்குவதற்காக
ஆயிரம் இலக்கவியல் பங்காளிகளை தாங்கள் தேர்வு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 சம்பவங்களுக்கு பிந்தைய புதிய இயல்பு வாழ்க்கைக்கு சமுதாயத்தை
தயார் படுத்தும் வகையில் இலக்கவியல் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும்
முயற்சியில் எம்.பி.ஐ. தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இலக்கவியலின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்துவதில் மக்கள்
பிரதிநிதிகள் முக்கிய பங்கினை ஆற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதியோர், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், பி40 தரப்பினருக்கு
ஆகியோரின் வாழ்க்கை தர மேம்பாட்டை உறுதி செய்வதற்காக மாநில அரசு
அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
NATIONAL
சிலாங்கூரில் 800,000 பேர் இலக்கவியல் துறைக்கு இன்னும் தயாராகவில்லை
16 நவம்பர் 2020, 1:43 PM
தொடர்புடைய செய்திகள்
national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
நிறுவன ஆலோசகராக கணவர் நியமனம்- பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக மனைவி மீது குற்றச்சாட்டு
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் மலேசியா வருகிறார்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




