ஷா ஆலம், நவ 16- இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் சாலையோரங்களில் கைவிடப்பட்ட 782 வாகனங்களை ஷா ஆலம் மாநகர்மன்றம் அகற்றியது.
இக் காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக இந்த வாகனங்கள் அகற்றப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
இழுவை வாகனங்கள் மூலம் அகற்றப்பட்ட அந்த கைவிடப்பட்ட வாகனங்கள் செக்சன் யு16, செக்சன் 17, மற்றும் செக்சன் 31 ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள கிடங்குகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டணமாக நாளொன்றுக்கு பத்து வெள்ளி வசூலிக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
பொதுமக்களுக்கு ஆபத்தும் வாகனமோட்டிகளுக்கு இடையூறும் ஏற்படுவதை
தடுப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
கைவிடப்பட்ட வாகனங்களில் நீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் பரவக்கூடிய வாய்ப்பு
ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வாகனங்களை கண்ட
இடங்களில் கைவிட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
PBT
கைவிடப்பட்ட 782 வாகனங்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் அகற்றியது
16 நவம்பர் 2020, 1:28 PM
தொடர்புடைய செய்திகள்
selangor
ரமலான் பஜார்களில் கழிவு சேகரிப்பு விகிதம் குறைந்துள்ளது
Shalini Rajamogun
10 மார்ச் 2026

selangor
வழிபாட்டுத் தலங்கள் விவகாரம்: சிலாங்கூர் ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் - டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தகவல்
Mavitthran
11 பிப்ரவரி 2026

selangor
2026-இல் சிலாங்கூர் உள்ளூராட்சி மன்றங்களின் சேவை தரம் மேம்படுத்தப்படும்: மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி உறுதி
Mavitthran
9 பிப்ரவரி 2026

selangor
வழிபாட்டுத் தலங்களைச் ''சட்டவிரோத'' இடங்கள் என்று முத்திரை குத்த வேண்டாம் - சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடும் எச்சரிக்கை
Mavitthran
26 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?




