ஷா ஆலம், நவ 6- விவசாயம், குப்பைகள் கொட்டுவது, குடியிருப்புகளை அமைப்பது ஆகிய நோக்கங்களுக்காக 1,055.27 ஏக்கர் அரசாங்க நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.கோல லங்காட்டில் 353 ஏக்கர் நிலமும் கிள்ளானில் 212.77 ஏக்கர் நிலமும் கோல சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங் மாவட்டத்தில் 100 நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இது தவிர, உலு லங்காட்டில் 84 ஏக்கர் நிலமும் கோம்பாக்கில் 80 ஏக்கர் நிலமும் சிப்பாங்கில் 72 ஏக்கர் நிலமும் உலு சிலாங்கூரில் 50 ஏக்கர் நிலமும் சபாக் பெர்ணமில் 3.5 ஏக்கர் நிலமும் இதே நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.
நில ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எதிராக தேசிய நிலச் சட்டத்தின் 452 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்து லட்சம் வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம், ஐந்தாண்டு வரையிலான சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று மேரு உறுப்பினர் முகமது பக்ருள்ரஸி முகமது மொக்தார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது மந்திரி புசார் இதனை சொன்னார்.
ஆற்றுத் தூய்மைக்கேட்டை கண்டறிவதற்கு டிரோன் சாதனத்தை பயன்படுத்தும் போது ஆற்றோரங்களில் நில ஆக்கிரமிப்புகளும் கண்டறியப்பட்டன என்றார் அவர்.
PBT
1,000 ஏக்கர் அரசாங்க நிலம் ஆக்கிரமிப்பு- மந்திரி புசார் தகவல்
6 நவம்பர் 2020, 10:01 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
ரமலான் பஜார்களில் கழிவு சேகரிப்பு விகிதம் குறைந்துள்ளது
Shalini Rajamogun
10 மார்ச் 2026

selangor
வழிபாட்டுத் தலங்கள் விவகாரம்: சிலாங்கூர் ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் - டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தகவல்
Mavitthran
11 பிப்ரவரி 2026

selangor
2026-இல் சிலாங்கூர் உள்ளூராட்சி மன்றங்களின் சேவை தரம் மேம்படுத்தப்படும்: மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி உறுதி
Mavitthran
9 பிப்ரவரி 2026

selangor
வழிபாட்டுத் தலங்களைச் ''சட்டவிரோத'' இடங்கள் என்று முத்திரை குத்த வேண்டாம் - சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடும் எச்சரிக்கை
Mavitthran
26 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?




