புத்ரா ஜெயா, நவ 6- அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் ஊராட்சி மன்ற கூட்டங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.தொடக்கமாக சிலாங்கூர் மற்றும் கூட்டசு பிரதேசத்தில் உள்ள 17 ஊராட்சி மன்றங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூராய்டா கமாருடின் கூறினார்.
நாடாளுமன்றத்தைப் போல் தாங்கள் நடத்தும் கூட்டங்களையும் நேரடியாக ஒளிபரப்ப ஒப்புக் கொண்டதன் மூலம் தங்களின் துணிச்சலையும் முன்னோக்கிச் செல்லும் ஆற்றலையும் ஊராட்சி மன்றங்கள் புலப்படுத்தியுள்ளன என்றார் அவர்.
ஊராட்சி மன்றங்களின் பங்களிப்பு என்ன? விவாதங்கள் எவ்வாறு நடக்கின்றன? வரி செலுத்துவோரின் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள இந்நடவடிக்கை வாய்ப்பினை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
ஊராட்சி மன்றங்களும் நட்சத்திர அந்தஸ்து வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
PBT
ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நேரடி ஒளிபரப்பு- அடுத்தாண்டு அமல்
6 நவம்பர் 2020, 9:47 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
ரமலான் பஜார்களில் கழிவு சேகரிப்பு விகிதம் குறைந்துள்ளது
Shalini Rajamogun
10 மார்ச் 2026

selangor
வழிபாட்டுத் தலங்கள் விவகாரம்: சிலாங்கூர் ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் - டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தகவல்
Mavitthran
11 பிப்ரவரி 2026

selangor
2026-இல் சிலாங்கூர் உள்ளூராட்சி மன்றங்களின் சேவை தரம் மேம்படுத்தப்படும்: மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி உறுதி
Mavitthran
9 பிப்ரவரி 2026

selangor
வழிபாட்டுத் தலங்களைச் ''சட்டவிரோத'' இடங்கள் என்று முத்திரை குத்த வேண்டாம் - சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடும் எச்சரிக்கை
Mavitthran
26 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?




