NATIONAL

முடிதிருத்தும் சேவைகளுக்கு இன்னும் அனுமதியில்லை- இஸ்மாயில் சப்ரி

1 ஜூன் 2020, 3:00 AM
முடிதிருத்தும் சேவைகளுக்கு இன்னும் அனுமதியில்லை- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, ஜூன் 1:

வீடுகளுக்குச் சென்று முடித்திருத்தும் சேவைகள் உட்பட முடிதிருத்தும் நிலையங்கள் செயல்படுத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூறியிருக்கிறார்.

அதற்கான செயல்பாட்டு தர விதிமுறையை, தேசிய பாதுகாப்பு மன்றம் எம்.கே.என் மற்றும் சுகாதார அமைச்சும் ஆராய்ந்து வருகின்றன.

இருப்பினும் முடித்திருக்கும் நிலையங்கள் திறப்பதற்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.   இதனிடையே,  எஸ்.ஒ.பியைப் பின்பற்றத் தவறிய ஏழு கட்டுமான பகுதிகளை மலேசிய கட்டுமானத் தொழிற்துறை மேம்பாட்டு வாரியமான சி.ஐ.டி,பி மூடியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

திங்கட்கிழமை, புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இஸ்மாயில் சப்ரி இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.