PBT

எம்பிஎஸ்: பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு கோவிட்-19 நோய் பரிசோதனை

11 மே 2020, 10:25 AM
எம்பிஎஸ்: பொதுச் சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு கோவிட்-19 நோய் பரிசோதனை

ஷா ஆலம், மே 11:

ஆறு பொதுச் சந்தைகளில் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கோவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக வெளிநாட்டினரிடையே நோய் பரவுவதைத் தடுக்க செலாயாங்  நகராண்மைக் கழகம்  (எம்பிஎஸ்) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அனைத்து பொதுச் சந்தைகளுக்கும் வருகை தரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதன் கார்ப்பரேட் துறை இயக்குனர் மொஹமட் ஜின் மசோட் கூறினார்.

" மே 8 ஆம் தேதி செலாயாங் பாரு பொதுச் சந்தையில் அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட முதல் பரிசோதனை நடத்தப்பட்டது, இதில் கம்போங் பெண்டஹாராவில் உள்ள செரோஜா மண்டபத்தில் 413 நபர்களுக்கு நடத்தப்பட்டது. சுகாதார அமைச்சு மற்றும் கோம்பாக்  வட்டார சுகாதார அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் காலை 9 மணிக்கு மதியம் 12 மணி வரைகோவிட்-19 பரிசோதனை தொடங்கியது," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரவாங் எம்பிஎஸ் நவீன பொது சந்தை, ஸ்ரீ கோம்பக் எம்பிஎஸ் நவீன பொது சந்தை, தாமான்  ஏசான் எம்பிஎஸ் பொது சந்தை, எம்பிஎஸ் கண்டிரி  ஹோம்ஸ் பொது சந்தை மற்றும் பத்து  அராங் எம்பிஎஸ் பொது சந்தை ஆகியவற்றில் சுமார் 820 நபர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வியாபாரிகள்  மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கும் இந்த பரிசோதனை விரிவுபடுத்தப்படும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.