PBT

எம்பிஎஸ்ஜே ரமலான் சந்தை முன்பணத்தை மே 12 முதல் திரும்பப் பெறலாம் !!!

8 மே 2020, 2:31 AM
எம்பிஎஸ்ஜே ரமலான் சந்தை முன்பணத்தை மே 12 முதல் திரும்பப் பெறலாம் !!!

ஷா ஆலம், மே 8:

அடுத்த வாரம் தொடங்கி சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஜே) ரமலான் சந்தை ரத்து செய்ததை முன்னிட்டு, அதன் முன்பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது. தாமான் பூச்சோங் பொது மண்டபத்தில் மே 12 தொடங்கி மே 15 கட்டம் கட்டமாக பெற்றுக் கொள்ள முடியும் என்று எம்பிஎஸ்ஏவின் முகநூலில் அறிவித்துள்ளது.

" ரமலான் சந்தையின் முன்பணத்தை காலை 9 முதல் மாலை 3 மணி வரை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், ஏற்கனவே விண்ணப்பம் செய்த நபர் மட்டுமே பணத்தை திருப்பி எடுக்க முடியும். சம்பந்தப்பட்டவர்களின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏற்கனவே விண்ணப்பம் செய்த நபர் தங்களது அடையாள அட்டை மற்றும் அதன் பிரதியை கொண்டு வர வேண்டும். முன்பணத்தை பெற வரும் அனைவரும் கண்டிப்பாக  முகமூடியை அணிந்து வர வேண்டும்," என்று எம்பிஎஸ்ஏவின் முகநூலில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.