PBT

இன்று முதல் எம்பிஎஸ் பகுதிகளில் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் சேவையை தொடரும் !!!

6 மே 2020, 8:05 AM
இன்று முதல் எம்பிஎஸ் பகுதிகளில் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் சேவையை தொடரும் !!!

ஷா ஆலம், மே 6:

இன்று தொடங்கி ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் செலாயாங் நகராண்மை கழகத்தின் (எம்பிஎஸ்) கீழ் மீண்டும் பணியில் ஈடுபடவிருக்கிறது. காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரையில் போக்குவரத்து சேவையை வழங்கும் என எம்பிஎஸ்-இன் கார்ப்பரேட் பிரிவு இயக்குநர் முகமட் ஸீன் மாசாட்  கூறினார். 9 ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் 3 வழிப்பாதைகளில் சேவைகளில் ஈடுபட உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” எல்லாப் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, முகமூடி அணிவது மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவுவது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.