PBT

எம்பிஎஸ்ஏ பொது மக்களை பிகேபியை பின்பற்றி வீட்டில் இருக்கும் படி வேண்டுகோள் !!!

1 ஏப்ரல் 2020, 12:34 AM
எம்பிஎஸ்ஏ பொது மக்களை பிகேபியை பின்பற்றி வீட்டில் இருக்கும் படி வேண்டுகோள் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 1:

கோவிட்-19 நோய் தீவிரமான முறையில் பரவும் சூழ்நிலையில் ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) பொது மக்களை வெளியே எந்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் வீட்டில் இருக்கும் நினைவுறுத்தி உள்ளது. எம்பிஎஸ்ஏ-வின் பொது உறவு மற்றும் கோப்ரட் பிரிவின் தலைவர் ஷாரின் அமாட் மாநகராட்சியின் கீழ் வாழ்ந்து வரும் பொது மக்கள் இந்நோய் தாக்குதலுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

" பொது மக்கள் எப்போதும் சுய சுகாதாரத்தை பேணிக் காத்து கோவிட்-19 நோய் பரவுவதை தடுக்க முடியும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

நேற்று செத்தியா அலாமில் நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாமல் மிதிவண்டியில் பயணித்த ஒரு கும்பலின் நடவடிக்கையை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது எம்பிஎஸ்ஏ நிர்வாகம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.