PBT

எம்பிஎஸ்: மதிப்பீட்டு வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 நீட்டிப்பு!

25 மார்ச் 2020, 3:37 AM
எம்பிஎஸ்: மதிப்பீட்டு வரி செலுத்துவதற்கான  கால அவகாசம் ஏப்ரல் 30 நீட்டிப்பு!

ஷா ஆலம், மார்ச் 25-

மதீப்பீட்டு வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது.

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாடு நிலையைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக எம்பிஎஸ் தலைவர் ஷாம்சுல் ஷாஹ்ரில் பட்லீஸா முகமது நோர் தெரிவித்தார்.

நடப்பு சூழ்நிலை காரணமாக சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் எதிர்நோக்கும் பொருளாதார சிக்கலையும் கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். இந்த கால அவகாச நீட்டிப்பினால் இன்னும் வரி செலுத்தாமல் இருக்கும் 55,000 பேர் பயனடைவர் என்று ஷம்சுல் தெரிவித்தார்.

அதே வேளையில், வரி செலுத்தாதவர்களுக்கு கைது ஆணை மற்றும் பறிமுதல் ஆணை ஆகியவை மே1 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.