PBT

கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்க மதிப்பீட்டு வரியை உடனடியாகச் செலுத்துவீர்!

10 பிப்ரவரி 2020, 7:13 AM
கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்க மதிப்பீட்டு வரியை உடனடியாகச் செலுத்துவீர்!

ஷா ஆலம், பிப்.10-

கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க, பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (எம்பிபிஜே) உட்பட்ட சொத்துடைமை கொண்டுள்ளவர்கள் மதிப்பீட்டு வரியை வரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் செலுத்திவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

“முதல் அரையாண்டிற்கான (ஜனவரி முதல் ஜூன் வரை) மதிப்பீட்டு வரியை வசூலிக்க மொத்தம் 273,434 கட்டண அறிக்கைகளை எம்பிபிஜே வெளியிட்டுள்ளது” என்று அதன் தலைவர் டத்தோ முகமது சாயுத்தி பக்கார் கூறினார்.

“நடப்பு கால வரி மற்றும் இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் வரிகள் உட்பட மொத்தம் 189 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கட்டண அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன” என்றார் அவர்.

கட்டண அறிக்கையை இன்னும் பெறாமல் இருப்பவர்கள் எம்பிபிஜே தலைமையகத்தில் உள்ள நிதி இலாகாவிற்கு வருகை புரிந்து அறிக்கை நகல்களைப் பெற்றுக் கொள்வதோடு வரியையும் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அதே வேளையில், இவ்வரியை இணையம் வழியாகவும் நடமாடும் இ-இஸட் பேய் முகப்பிடங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் நில மற்றும் மாவட்ட அலுவலகங்களிலும் செலுத்தலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.