PBT

நகராண்மைக் கழக அந்தஸ்துக்கு எம்டிகேஎஸ் மேல்முறையீடு செய்யும்

3 டிசம்பர் 2019, 3:01 AM
நகராண்மைக் கழக அந்தஸ்துக்கு எம்டிகேஎஸ் மேல்முறையீடு செய்யும்

ஷா ஆலம், டிச.3-

மாவட்ட அந்தஸ்தில் இருந்து நகராண்மைக் கழகமாக உயர்த்துவது மீதான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவிருப்பதாக கோலசிலாங்கூர் மாவட்ட மன்ற (எம்டிகேஎஸ்) தலைவர் ரஹிலா ரஹ்மாட் தெரிவித்தார்.

மாவட்ட மன்றத்தின் விண்ணப்பத்தை வீடமைப்பு ஊராட்சி அமைச்சு நிராகரித்ததைத் தொடர்ந்து அதன் தற்போதைய நிலை குறித்து வினவப்பட்ட போது அவர் மேற்கண்ட விளக்கத்தை அளித்தார்.

முன்னதாக, தனது அந்தஸ்து உயர்த்தும் மறு விண்ணப்பத்துடன் எம்டிகேஎஸ் அதன் மேம்பாட்டு திட்ட அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் 13ஆம் தேதி , மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். இதுவரையில், கோல லங்காட் மாவட்டம் மட்டுமே கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நகராண்மைக் கழகமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.