PBT

சாலையோரத்தில் நிறுத்தி வைத்த கன ரக வாகனங்களுக்கு சம்மன்!

2 டிசம்பர் 2019, 4:49 AM
சாலையோரத்தில் நிறுத்தி வைத்த கன ரக வாகனங்களுக்கு சம்மன்!

கிள்ளான், டிச.2-

வீடமைப்பு பகுதியில் சாலையோரத்தில் கன ரக வாகனத்தை நிறுத்து வைத்தவருக்கு அமலாக்கத் தரப்பினர் அபராதமும் சம்மனும் விதித்தினர். கடந்த சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட கன ரக வாகனங்கள் மீதான அதிரடி நடவடிக்கையில் கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) 17 அபராத அறிக்கைகளை வெளியிட்ட வேளையில், தென் கிள்ளான் போக்குவரத்து போலீசார் 16 சம்மன்களை வெளியிட்டனர்.

சாலை பயனீட்டாளர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து பொது மக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்பிகே செயலாளர் எலியா மாரினி டார்மின் கூறினார். வீடமைப்பு பகுதிகளில் உள்ள சாலையோரத்தில் கன ரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.