PBT

அக்டோபர் 24 வரை வெ.181.1 மில்லியன் மதிப்பீடு வரி வசூலிப்பு! எம்பிகே பெருமிதம்

31 அக்டோபர் 2019, 7:10 AM
அக்டோபர் 24 வரை வெ.181.1 மில்லியன் மதிப்பீடு வரி வசூலிப்பு! எம்பிகே பெருமிதம்

கிள்ளான், அக்டோபர் 31:

இவ்வாண்டு அக்டோபர் 24ஆம் தேதி வரையில் மதிப்பீட்டு வரியாக மொத்தம் 181.1 மில்லியன் வெள்ளியை கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) வசூலித்துள்ளது. கடந்தாண்டு இதே கால கட்டத்தில் 171.1 மில்லியன் வெள்ளி மட்டுமே வசூலிக்கப்பட்டது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வசூலிக்கப்பட்ட தொகை 6 விழுக்காடு அல்லது 10 மில்லியன் வெள்ளி அதிகரித்துள்ளது என்று எம்பிகே தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் தெரிவித்தார்.

2018 முதலாம் காலாண்டில் 77.7 மில்லியன் வெள்ளி மதிப்பீட்டு வரியாக வசூலிக்கப்பட்ட வேளையில் இவ்வாண்டு 3 விழுக்காடு அதிகரித்து 79.9 மில்லியன் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

அதேவேளையில் 2018 இரண்டாம் காலாண்டில் 70.9 மில்லியன் வெள்ளி மட்டுமே வசூலிக்கப்பட்டது என்றும் இவ்வாண்டு அதே கால கட்டத்தில் 77.6 மில்லியன் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.