SELANGOR

காலிறுதி சுற்றுக்கு சிலாங்கூர் தகுதி பெற்றது

19 செப்டெம்பர் 2019, 12:01 AM
காலிறுதி சுற்றுக்கு சிலாங்கூர் தகுதி பெற்றது

ஷா ஆலம், செப்.19-

பெல்டா யுனைடெட் குழுவை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் சிவப்பு ஜயண்ட் வீழ்த்தியது அதன் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஃப் ஏ கிண்ணத்தின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் எஃப் ஏ குழுவிடம் அடைந்த தோல்விக்கு வஞ்சம் தீர்த்துக் கொண்ட வேளையில், மலேசிய கிண்ண கால் சுறுதி ஆட்டத்திற்கும் சிலாங்கூர் குழு தகுதி பெற்றது ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியாகும்.

துன் அப்துல் ரசாக் அரங்கத்தில் நடைபெற்ற டி குழுவின் இறுதி ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் சற்று கடுமையாக இருந்தபோதிலும், இக்குழுவின் செல்லப் பிள்ளையான பி சத்தியநாதன் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் சிலாங்கூரின் முதல் கோலை இஃபெடாயோ ஒமொசுயி புகுத்திய வேளையில், 73ஆவது நிமிடத்தில் முயிமீன் ஜம்ரி ஆட்டத்தின் வெற்றி கோலான இரண்டாவது கோலைப் போட்டு சிலாங்கூரின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.