SELANGOR

பிடிஆர்எம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிலாங்கூர் சமநிலைக் கண்டது

19 ஆகஸ்ட் 2019, 12:07 AM
பிடிஆர்எம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிலாங்கூர் சமநிலைக் கண்டது

கோலாலம்பூர், ஆக.19-

33 முறை மலேசிய கிண்ணத்தை வென்றுள்ள சிலாங்கூர், ஷா ஆலம் அரங்கத்தில் ஆடிய மூன்றாவது ஆட்டத்தில் அரச மலேசிய போலீஸ் குழுவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடிய ஆட்டத்தில் 1-1 என்று சமநிலை கண்டது.

இந்த முடிவின் காரணமாக, இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களில் 5 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள சிலாங்கூர் அணி,, புள்ளிப் பட்டியலில் பெல்டா யுனைடெட் குழுவை 3-1 என வீழ்த்திய மலாக்கா மாநிலத்திற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

டி பிரிவில் காலிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெறும் இரண்டு அணிகளுக்கான போட்டியில் இ. இளங்கோவன் தலைமையிலான அரச மலேசிய போலீஸ் அணி சிலாங்கூருடனான ஆட்டத்தில் சமநிலை கண்டதன் மூலம் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று சிலாங்கூருக்கும் மலாக்காவிற்கும் தொடர்ந்து மிரட்டலாகத் திகழ்ந்து வருகிறது.

சிலாங்கூர் அணி அதன் முதல் கோலை சந்திரோ டி சில்வா மூலம் புகுத்திய 7 நிமிடத்திற்குப் பின்னர் ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் அரச மலேசிய போலீஸ் படையின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் தலையால் முட்டிப் புகுத்திய கோலை பிடிஆர்எம் ஆட்டக்காரர்கள் அர்க்ஸிம் ரெட்ஸோவிக் ஆட்சேபித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.