PBT

தீபாவளி பெருநாள் தற்காலிக கடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது

9 செப்டெம்பர் 2017, 4:26 AM
தீபாவளி பெருநாள் தற்காலிக கடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 9:

கிள்ளான் நகராண்மை கழகத்தின் (எம்பிகே) தீபாவளி பெருநாள் தற்காலிக கடைகள் விண்ணப்பம் செய்ய வியாபாரிகள் வரவேற்கப்படுகின்றனர். எதிர் வரும் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று எம்பிகேவின் தொழில்முறை தொடர்பு பிரிவு இயக்குனர் நோர்பீஸா மாபீஸ் கூறினார். இந்த தற்காலிக கடைகள் அக்டோபர் 4-இல் தொடங்கி அக்டோபர் 17 வரை நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.

"  விண்ணப்பம் செய்ய வேண்டுவோர் செப்டம்பர் 4-இல் தொடங்கி செப்டம்பர் வரை செய்யலாம். கடைகளுக்கான குலுக்கல் செப்டம்பர் 26-இல் பண்டமாரான் விளையாட்டு மையத்தில் நடைபெறும்," என்று அறிக்கையில் கூறினார்.

நோர்பீஸா மேலும் கூறுகையில், விண்ணப்பம் செய்யும் நபர்கள் மலேசியர்களாகவும், வியாபார உரிமம் உள்ளவர்களாகவும், தற்காலிக வியாபார பெர்மிட் கொண்டவர்களாகவும் இருத்தல் அவசியம். விண்ணப்பம் செய்யும் வேளையில் கட்டணமாக ரிம 720 செலுத்த வேண்டும் என்றார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.