PBT

கிள்ளான் நகராண்மை கழக நோன்புப் பெருநாள் நிகழ்வு பொது மக்களை கவர்ந்தது

7 ஜூலை 2017, 4:16 PM
கிள்ளான் நகராண்மை கழக நோன்புப் பெருநாள் நிகழ்வு பொது மக்களை கவர்ந்தது

கிள்ளான், ஜூலை 7:

கிள்ளான் நகராண்மை கழக நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு இன்று தாமான் பெங்கலான் பத்து, தெலுக் பூலாய் சாலை, கிள்ளானில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் சிறப்பு வருகையோடு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

கிள்ளான் நகராண்மை கழகத்தின் தலைவர் டத்தோ முகமட் யாஸிட் பீடின் தலைமையில் நடந்தேறிய நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு நகராண்மை கழக உறுப்பினர்களான ஆதி சரவணன், செபஸ்டியன் ராவ், நல்லன், டத்தோ தீபாகரன், இயூ பூன் லாய் மற்றும் இந்திய கிராமத்து தலைவர்ககள் திருமதி கண்மணி, திரு ராதாகிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பொது மக்கள் பலர் சிலாங்கூர் மந்திரி பெசாருடன் 'செல்பிஃ' எடுத்து கொண்டது, டாருல் ஏசான் கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பில் அவர் மீது 68% மக்கள் ஆதரவு அளித்து வருவது நிருபிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

"  கிள்ளான் நகராண்மை கழகம் மிகப் பெரிய பகுதியை கொண்டிருந்தாலும் பல மக்கள் எதிர் நோக்கும் சிக்கல்களை தீர்த்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில் குப்பைகளை அகற்றும் சிக்கல்கள் குறைந்த நிலையில், சில பொறுப்பற்ற நபர்கள் குப்பைகளை கால்வாய்ககளில் கொட்டும் நடவடிக்கையினால் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது," என்று நகராண்மை கழக உறுப்பினர் ஆதி சரவணன் தெரிவித்தார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.