ஷா ஆலம், ஆகஸ்ட் 30: டெங்கில் போதைப்பொருள் மறுவாழ்வு மையமான புஸ்பென் (PUSPEN) நிலையத்திலிருந்து அண்மையில் தப்பிச் சென்ற இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தப்பிச் சென்ற இருவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாகத் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையின் (AADK) தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோஹ் தெரிவித்தார்.
இருவரும் மீண்டும் டெங்கில் புஸ்பென் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விரைவில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இருவரும் காணாமல் போனது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.







